Friday, 10 February 2017

ஊர்க்காவலன்
----------------------------------
கொக்கரிக்கும் சிரிப்புக்காரி...
கோவப்பட்டா எரிமலை
வெடிப்புக்காரி...

வாயில கூர்வால்
சண்டைபோடும்...
மனசெல்லாம் அன்பு
மண்டிபோடும்...

வெண்டைக்காய்
மனசுக்காரி...
சண்டைனா..முதல்
பரிசுக்காரி....

பாசம்னா வெளிப்படையா
காட்டமாட்டா...
பாயாசம்னா நான்
இல்லாம குடிக்கமாட்டா..

கோவத்துல உயர் அழுத்த
நெஞ்சுக்காரி...
வேலைனு வந்துட்ட
நிறத்துல மட்டுமில்ல
நிஜத்துலயும் சொல்றேன்
வெள்ளைக்காரி...

ஒரு நாள் ஓடுர ஓடையில கால் வெச்சா...
கெண்டை மீனெல்லாம்
அவ கெண்டைக்காலழகுல
வெட்கி தல குனுஞ்சிடுச்சி.

சொக்கத்தங்க நிறத்தழகி..
சிவப்பு நிற உதட்டழகி...
கறுத்த விழி உருட்டி பாப்பா
வெறுக்கவே மாட்டேன் அவதான் என் பாப்பா....

பக்கத்துல நின்னா
கண்டுக்கவேமாட்டா...
காணாம போன
என்னை நினக்காம
கண்ணுரங்கமாட்டா..!

பாசக்காரி , ரோஷக்காரி.
அன்பில்லாத போல
நடிக்கரதுல எல்லா நடிகரும் தோற்கும்
வேஷக்காரி....

அவள போல ஆடையில
ஆயிரம் பேர் பாக்குறேன்..
அவளப்போல் ஜாடையில ஒருத்தரையும் காணோமே

சண்டையோ...
தண்ணில இருக்க
கெண்டையோ...
ரெண்டு பேர் மட்டும்
புடிச்சிகுங்க
மூனாம் ஆள உள்ள விட்டா
முடிச்சிடுவாங்க மொத்தமாக...அப்படி
முடிஞ்சவங்கல்ல
நானும் ஒருத்தன்...
இருந்திடாதிக மெத்தனமாக.....

வாழ்க்கை அவதானு
வெச்சிப்புட்டேன்
ஓரமாக..
வந்துட்டானா வாழ்க்கை போகும்..கரும்பு சாரமாக
இல்லன்ன எனக்கு மட்டும்
பாரமாக....

கட்டிக்க ஆசைப்பட்ட முதல்ல
காதல்ல விழனும்
அப்புறம் அவளுக்காக
யார் காலுல வேணும்னா
விழனும்..

விழுந்தவன் சொல்றேன்...
விழாதிங்க...காதல்ல...
அழாதிங்க... வேதனைல..
ஆனா ஒன்னுங்க...
அவ ஓரக்கண்ணால பாக்க்குற அழகுல..
ஒரு நாள் வாழ்ந்தாலும் அவ கூடதான்....

(மேற்கண்ட புலம்பல் எல்லாம் புதுசா திறந்த டீகடை ஓரம்...
ஒரு தினுசா பேசுற பைத்தியக்காரன்...
பசிக்குதுனு ஆரம்பிச்சி...
படுக்கைக்கு போற வரைக்கும்... பாப்பா பாப்பானு ..கூப்பாடு போடுறானாம்..)

பாவம் அவன் முடி வெட்டவும் இல்ல
இப்படி பட்ட வாழ்க்கைக்கு
முடிவுகட்டவும்..இல்ல...

அவன் அழுக்கு சட்டையில நான் பாத்ததென்னவோ..
அழகான வெள்ளை மனசு..
அடுத்த கடைக்கு போய்
ஐயா பசிக்குதுனு
ஆரம்பிச்சான்...முதல்வரி
கொக்கரிக்கும் சிரிப்புக்காரி.....

என்றும் அன்புடன்..ஜெ.பி