அன்னை தெரசா
எழுத்துக்கள் இல்லை
உன் (முக)வரிகளில்
ஆனாலும் அழகு!
முண்டாசுக்கவிதை நீ
ஆதரவற்ற குழந்தைகளின்
முகவரி அழகுதானே என்றும்
பொறுமையின் உச்சம் நீ
வெறுமையின் மிச்சம் நீ...
பிறப்போ உலகின் ஒர் மூலை
நடப்போ ஆதரவற்றோர்
நடக்கும் சாலை...
\வேதம் சொல்லதான் வந்தாய்
ஆனால் எம்மில்
வேறுபாடு களைந்தாய்
எங்களுக்கு நீ ஒரு கலைத்தாய்..
வெண்ணாடைக்குள் ஒரு பரிசுத்தம்
பொன்னாடைகள் எல்லாம்
உன் பின் நிற்கும்..
அன்பின் அடையாள சின்னம்
உனக்கு பின் யாருமில்லை
என்பதே திண்ணம்..
ஓய்வு இல்லை உனக்கு
ஓய்ந்தாலும் வீழ்வதில்லை
அன்பின் செருக்கு..!!1
கருவறை இல்லாத தாய்
நீ ஒருவளே..
ஊர் குழந்தைகளின்
ஓர் அனனையே
உலக உயிர்களின்
தாகம் தீர்க்கும் தென்னையே....ஜெ.பி
No comments:
Post a Comment